மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்- வைகோ அதிரடி அறிவிப்பு

மதிமுகவில் இருந்து துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மதிமுக துவங்கிய காலத்தில் இருந்து வைகோவுடன் பயணம் செய்தவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும், முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. இந்நிலையில் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மல்லை சத்யா, தன்னைத் துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார். இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.

இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மதிமுகவில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்​பாக மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ அனுப்​பிய கடிதத்​தில், “கட்​சி​யின் சட்ட திட்​டங்​களை மீறி ஒழுங்​கீன​மாக நடந்து கொள்​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்து வரு​வ​தால், மல்லை சி.ஏ.சத்​யாவை கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் தற்​காலிகமாக நீக்கிவைக்க உத்​தர​விடப்​படு​கிறது. ஒழுங்கு நடவடிக்​கைக்கு உட்​பட்டு கட்​சி​யின் உடமை​கள், ஏடு​கள், பொறுப்​பு​கள், கணக்​கு​கள் அனைத்​தை​யும் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளரிடம் ஒப்​படைக்க வலி​யுறுத்​தப்​படு​கிறது.

அவரது கருத்​துக்​கோ, செயல்​பாட்​டுக்கோ மதி​முக பொறுப்​பேற்​காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்​படுத்​தக் கூடாது. மதி​முக தலைமை நிர்​வாகி​கள் குறித்து கருத்து பதிவு செய்​யக் கூடாது” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா, என் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்திய துரை வைகோ மீது நடவடிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *