அரசு வேலையை கனவாகக் கொண்ட பல இளைஞர்கள் இருக்கிறார்கள். 2,3 தேர்வுகளில் தொடங்கி 10 தேர்வுகளில் தோல்விகள் அடைந்தாலும், என்றாவது ஒருநாள் அரசு வேலையை வாங்கி விடுவோம் என்ற கனவில் அவர்கள் விடாப்படியாக படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
புதிய தகவல்:-
அவர்களுக்கு எல்லாம் அடுத்தாண்டு (2026) கவனம் செலுத்த வேண்டிய டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்தான ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது குரூப் 2/2A ; குரூப் 4 ஆகிய இந்த இரண்டு தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தி படித்தால் போதும் அடுத்த ஆண்டு நிச்சியம் நீங்கள் அரசுப் பணியாளராக அல்லது அரசு அதிகாரியாக வரலாம்.
குரூப் 4, குரூப் 2/2A
சரியாக 2 மாதங்களுக்கு அப்புறம் டிஎன்பிஎஸ்சி (TNPSC) சார்பில் அரசுத் தேர்வுகளுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும். டிசம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் அது வெளியிடப்படும். அதில் நிச்சயம் குரூப் 4, குரூப் 2/2A தேர்வுகளுக்கான அறிவிப்பு அதிகபட்சமாக எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக அரசுப்பணியை எதிர்நோக்கி இருப்பவர்கள் இப்போது இருந்தே இந்த தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினால், அடுத்த ஆண்டு நிச்சியம் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு செல்லலாம்.
இதில் சோகம் என்னவென்றால் அடுத்த ஆண்டு குரூப் 2/2A; குரூப் 4 தேர்வுகளுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை இந்தாண்டை விட, மிக குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
