பணமோசடி வழக்கில் பிரபல நிறுவன இயக்குநர் கைது… அமலாக்கத்துறை அதிரடி!

பணமோசடி வழக்கில் பிரபல நிறுவனமான ஜேபி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுர் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ஜேபி(Jaypee Group) இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மனோஜ் கவுர் உள்ளார். இந்த நிறுவனம் 2017-ம் ஆண்டு திவாலானது. இதன் பிறகு பல சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுர், வீடு வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்து விட்டு ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மே மாதம்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுருக்குச்  சொந்தமான  டெல்லி, நொய்டா, காஜியாபாத் உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது சுமார் ரூ.1.70 கோடி பணம், ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து ஆணவங்கள் உள்ளிட்டவையை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.  இந்த நிலையில், மனோஜ் கவுர் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *