ஆட்டோ ஓட்டுநரை கடத்தி கொலை- 6 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் கைது

சிக்கபள்ளாப்பூரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூரைச் சேர்ந்தவர் கிரிஷின்(27). ஆட்டோ ஓட்டுநரான இவர் ஷிட்லகட்டா நகரைச் சேர்ந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு மே12-ம் தேதி பழைய பகை காரணமாக  கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஷிட்லகட்டா நகர் காவல் நிலைய போலீஸார் கிரிஷின் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் கிரிஷினை கொலை செய்த குற்றவாளிகள் ஐந்து பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். பழைய பகை காரணமாக கிரிஷினை கொலை செய்ததாக  திவாகர் ஹரிஷ், மார்த்தண்டன், சந்திரா, ரஞ்சித் குமார், மஞ்சுனா என்ற கபாப் மஞ்சு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிரிஷினை கடத்தி கொலை செய்து அவரது உடலை தமிழ்நாட்டில் வீசியது தெரிய வந்தது. இக்கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது குற்றவாளிகள் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *