விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களான 2,600 மாணவ, மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உப்பை கண்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், விளையாட்டு விடுதிகளில் டிஜிட்டல் சாதனங்கள் மூலம் பயிற்றுநர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் மேலாண்மை அமைப்பை உபயோகித்தல் மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பான பயிற்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், விளையாட்டு வீரர்களின் தினசரி பயிற்சி தேவைகள், மறு சீராக்கம் மற்றும் முழுமையான உடல் நலத்தை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்றுவரும் 2,600 மாணவர்களுக்கு ரூ.71.15 லட்சம் மதிப்பில் சாம்பியன்ஸ் கிட்களையும் துணை முதல்வர் வழங்கினார்.
மேலும், ஙஙவிழாவில், SDAT சார்பில் Athlete Management System மென்பொருளை பயன்படுத்துவதற்கான பயிற்சியைத் தொடங்கி வைத்து, அதற்குத் தேவையான உபகரணங்களைப் பயிற்சியாளர்களிடம் வழங்கப்பட்டது.
ரூ.20.10 லட்சம் மதிப்பில் 1000 ஸ்மார்ட் வாட்ச்-கள்; ரூ.39.59 லட்சம் மதிப்பில் 2600 வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் செயின்ஸ் கிட் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
