அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆக.23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், வருகிற ஆக.23-ம் தேதி (சனிக்கிழமை) அன்று சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.