திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து எரிப்பு: பாஜக மீது புகார்!

பிஹார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

பிஹார் சட்டமன்றத் தேர்தல் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக 89 தொகு​தி​களிலும், ஐக்​கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக்​ மோர்ச்சா 4, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன.

இதற்கு எதிராக போட்டியிட மகாபந்தன் என்ற இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்​கிரஸ் 6, இந்​திய கம்​யூனிஸ்ட்( எம்​எல்) 2, மார்க்​சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகு​தி​யில் வெற்றி பெற்​றன. இந்த கூட்டணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. கடந்த தேர்​தலை ஒப்​பிடும்​போது மெகா கூட்​டணி 75 இடங்​களை  இழந்​துள்​ளது.

இந்த நிலையில் பிஹார் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக தாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் பல இடங்களில் அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டதுடன், அதில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. குறிப்பாக கமல்பூரில் உள்ள மாணிக் பந்தரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியதுடன் பாஜகவினர் தீ வைத்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த அலுவலகத்தை பாஜக தாக்குவது 9வது முறையாகும். மேலும் நெசவாளர் கடை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு திரிபுரா எதிர்க்கட்சி தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் வன்முறை அரசியலுக்கு எதிராக திரிபுரா மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *