வங்கதேசத்தில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
வங்கதேசத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். கோல்கட்டா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
வங்கதேசத்தில் இன்று (நவம்பர் 21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. இது புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. வீட்டின் சுவர் இடிந்துவிழுந்து 3 பேர் உயிரிழந்தனர். தண்டவாளங்கள் விழுந்து 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர் மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்து விட்டனர். இந்த நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. மேலும், கொல்கத்தா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்குவதையும், மின் விசிறிகள் அசைவதையும் வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டாக்காவில் நடந்த வங்கதேசம், அயர்லாந்து இடையிலான கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
