தமிழகத்தின் மத்திய மற்றும் தென்பகுதிகளில் டெல்டா விரிவாக்க மையத்தை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில் அமைந்துள்ள புதிய உற்பத்தி ஆலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினர். இது டெல்டா நிறுவனத்தின் ரூ.450 கோடி திட்ட மதிப்பில் உருவான ஆலையாகும். புதிய டெல்டா ஸ்மார்ட் உற்பத்தி பிரிவை திறந்து வைத்து டெல்டா தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதன் பின் அவர் பேசுகையில், ”எலக்ட்ரானிக்ஸ் துறையில் டெல்டா முன்னனி நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஓசூர் தொழில் வளர்ச்சியில் டெல்டாவின் பங்களிப்புக்கு நன்றி. இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மையமாக தமிழ்நாடு உள்ளது.
அடுத்தகட்டமாக தமிழகத்தின் மத்திய மற்றும் தென்பகுதிகளில் டெல்டா விரிவாக்க மையத்தை அமைக்க வேண்டும். திராவிட மாடல் அரசு அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என உறுதி கூறுகிறேன்” என்றார்.