நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்… 10 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகிறது!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 9) தேனி, கோவை,ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 10) நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை மறுநாள் (அக்டோபர் 11) நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், அக்டோபர் 12-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், அக்டோபர் 13-ம் ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், அக்டோபர் 14-ம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *