ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவலை அதிகப்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை தகவல் தெரிவித்தது. அந்த தகவல் அடிப்படையில், காஷ்மீரில் பல்வேறு பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறிடிக்க ஆபரேஷன் பிம்பிள் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. குப்வாராவில் நேற்று முதல் ஆபரேஷன் பிம்பிள் ராணுவ நடவடிக்கை தொடங்கி தீவிர தேடுதல் பணி நடைபெற்றது.
அப்போது ஊடுருவ முயற்சி செய்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் தேடுதல் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
