திருப்பதி ஏழுமலையான் கோயிலை டிரோன் மூலம் வீடியோ, புகைப்படம் எடுத்து நோட்டமிட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோயிலின் புனிதத்தை காக்கும் வகையில், கோயில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா டிரோன்கள் பறக்க நிரந்த தடை உள்ளது.
இந்த நிலையில், திருப்பதியில் இரண்டு பேர் டிரோன்களை பறக்க விட்டு படம் பிடித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், இரண்டு பேரைப் பிடித்து அவர்களிடமிருந்த டிரோன்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த சர்வலக்ஷன் தாஸ். ஆந்திரா மாநிலம், ஒங்கோலை சேர்ந்த பானுச்சந்தர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களைப் பிடித்து போலீஸாரிடம், தேவஸ்தான அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
