தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிர்ப்பு- உயர் நீதிமன்றத்தில் முறையீடு

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில், தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

மனுதாரர் சார்பில் முறையீடு செய்த வழக்கறிஞர் பிரசாந்த் நடராஜ்,, தற்காலிக அடிப்படையில் டிஜிபியை நியமிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம். எனவே, இது சம்பந்தமாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *