அங்காரா: துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது.
துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரம் மர்மாரிஸ். இங்கு இன்று (ஜூன்3) 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
நிலநடுக்கம் மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது. கிரீசில் உள்ள தீவான ரோட்ஸ் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து, வீடுகளில் இருந்து வெளியே ஓடினர்.