மனைவி இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவர், மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷன்பூரைச் சேர்ந்தவர் பீபி கௌஷல். அவர் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் பீபி கௌஷலை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பீபி கௌஷலை மாயாகஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அசர்கஞ்ச் காவல் நிலைய போலீஸார், பீபி கௌஷல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது பீபி கௌஷலை கொலை செய்தது அவரது மருமகனான அஃப்தாப் என்பது தெரிய வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பீபி கௌஷலின் மகள் சப்னத்தை அஃப்தாப் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்தனர்.
இந்த நிலையில், ஷப்னம் மறுமணம் செய்து கொண்டார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஷப்னத்தை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாக அஃப்தாப் கூறியுள்ளார். ஆனால், தனது இரண்டாவது திருமணம் செய்த ஷப்னம், முன்னாள் கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஷப்னம் குடும்பத்தை கொலை செய்து விடுவதாக அஃப்தாப் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் பீபி கௌஷலை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஃதாப்பை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாகல்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.