சாலைகளுக்கு சாதிப்பெயர் இருக்கலாமா?- உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சாலைகளுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. அதன்படி, மறுபெயரிடுவது தொடர்பாக கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சிகளில் செயல் அலுவலர் மற்றும் ஆணையர்கள் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்றும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் கவனமாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதப்படி இறுதி செய்யப்பட்ட பெயர்களை மாவட்ட அரசிதழில் வெளியிட்டு ஆட்சேபனைகளை தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். தன்பிறகு அரசின் அனுமதி கிடைத்த உடன் பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் நவம்பர் 11-ம் தேதிக்குள் முடித்து மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், முதற்கட்ட கள ஆய்வு பணியை மேற்கொள்ளலாம். சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக கருத்து கேட்பு, ஆய்வுகள் நடத்த வேண்டும். அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கு குறித்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *