வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு! – ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ் என்னென்ன..?

வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதை இங்கு விரிவாக பார்ப்போம்!

  • காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது.
  • கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது.
  • வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும்.
  • கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *