பாகிஸ்தான் மக்கள் ஷாக் – நிலநடுக்கம் ரிக்டரில் 4 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இன்று மதியம் ( இந்திய நேரப்படி அதிகாலை 2.06 மணியளவில்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.19 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *