பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை: நடிகை ரம்யா வரவேற்பு

பாலியல் வழக்கில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு நடிகை ரம்யா வரவேற்றுள்ளார்.

இந்தியாவின் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின.

இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 4 பெண்​கள் பிரஜ்வலுக்கு எதி​ராக புகார் அளித்​தனர். அதன்​பேரில் அவர் மீது 5 பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். சிறப்பு விசா​ரணை பிரிவு போலீ​ஸார் இவ்​வழக்கில் 1,632 பக்க குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தனர்.

பெங்​களூரு​வில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு நடை​பெற்றது. அனைத்​துகட்ட விசா​ரணை​யும் நிறைவடைந்த நிலை​யில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்ற நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட், ஆகஸ்ட் 1-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

‘‘இவ்​வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் அரசு தரப்​பால் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளன. அதற்​கான சாட்​சி​யங்​களும், ஆவணங்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் அடிப்​படை​யில் பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது. அவருக்​கான தண்​டனை விவரங்​கள் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளி​யிடப்​படும்​” என நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட் தீர்ப்​பளித்​தார்.

அதன்படி தண்டனை விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அறிவித்தார்.

இந்த வழக்கில் அவர் மீது பதிவான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ரம்யா மகிழ்ச்சி தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “சட்டம் அனைவருக்கும் ஒன்றே. பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *