மதுரை மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக் குறைவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும்  இருப்பவர் ஐ.பெரியசாமி. கட்சி, அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து பங்கேற்ற அவருக்கு நேற்று இரவு 8 மணியளவில் திடீரென  கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை, ஈசிஜி, எக்கோ, ஸ்கேன் போன்ற முக்கிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் ஐ.பெரியசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த வாரம் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *